ATM கார்டு, கிரெடிட் கார்டு இனி செல்லாது - வெளியான முக்கிய அறிவிப்பு!
வங்கிக்கு நேரடியாக சென்று மொபைல் எண்ணை பதிவு செய்யாவிட்டால் நவ.முதல் ATM கார்டு, கிரெடிட் கார்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ATM கார்டு,கிரெடிட் கார்டு இனி செல்லாது
பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கி தனது வடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகள் நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக உங்கள் வங்கி கிளைக்கு சென்று மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்.
பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது
இதனை, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செய்ய தவறினால் நவம்பர் 1லிருந்து பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. வங்கிகள் தொடர்பான அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற விரும்பினால் கட்டாயமாக மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்.
இதனால், வங்கி கிளைக்கு நேரடியாக சென்று மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை நிரப்பி பாஸ்புக் மற்றும் ஆதார் கார்டு நகலை ஒப்படைக்க வேண்டும்.