பிரபல இளம் வீராங்கனை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி
பஞ்சாபில் இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை குஷ் சீரத் கவுர் சந்து தேசிய அளவிலான போட்டிகளில் பலபதக்கங்களை வென்றுள்ளார். ஆனால் சமீபத்தில் முடிவடைந்த 64-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் அவர் தோல்வி அடைந்தார். இதனால் அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பரித்கோட் இல்லத்தில் நேற்று முன்தினம் காலை தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, ஃபரித்கோட் காவல் துறையினர் கூறியதாவது, "ஒரு சிறுமி சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக ஃபரித்கோட் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்தது.
அவரின் உடலில் குண்டுபாய்ந்த காயம் தென்படுகிறது. உடற்கூராய்வுக்குப் பிறகு உடல் அவரின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என குஷ் சீரத் கவுர் தெரிவித்துள்ளார்.