பிரியாணி சாப்பிட்ட குறும்பட இயக்குநர் உயிரிழந்தார் - பரபரப்பு சம்பவம்
சென்னை வியாசர்பாடியில், பிரியாணி சாப்பிட்டு விட்டு தூங்கிய குறும்பட இயக்குநர் ரஞ்சித் என்பவர் தலைச்சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியில், ரத்தினம் பகுதியை சேர்ந்த குறும்பட இயக்குனர் ரஞ்சித், ஒரு சில குறும்பட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், அவர் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், மது அருந்திய ரஞ்சித், போதையிலேயே பிரியாணி வாங்கி சாப்பிட்டிருக்கிறார். பிரியாணி சாப்பிட்ட சில மணிநேரத்திலேயே ரஞ்சித் மயங்கியுள்ளார். இவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் ரஞ்சித் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் இறப்பிற்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளார்.