இன்றைய ராசிபலன் (13.10.2021)

astrology
By Nandhini Oct 13, 2021 03:20 AM GMT
Report

மேஷம்

இன்றைய நாள் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார்.

ரிஷபம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.

மிதுனம்

உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கடகம்

பேச்சால் பல பிரச்னைகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

கன்னி

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

துலாம்

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும்.

மகரம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.

கும்பம்

அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள்.

மீனம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.