விநாயகர் காயத்ரி மந்திரம் - இதை 108 முறை சொல்லி வழிபடுங்கள்! வீட்டில் நன்மை பெருகும்
மந்திரங்கள் என்பது மகத்தான சக்திகளை கொண்டுள்ளது. கடவுள் மீது கவனம் செலுத்த உதவி செய்கிறது. தெய்வீக அதிர்வை ஏற்படுத்தி பிரபஞ்சத்தில் எதிரொலி ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து மந்திரங்கள் சொல்வது மனதுக்கு அமைதியையும் தெளிவையும் தரும். விநாயகர் காயத்ரி மந்திரத்தைச் சொல்வது பல விதமான தோஷங்களை நீக்கிவிடும். தினமும் விநாயகர் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வந்தால் காரியத் தடைகள் விலகி போகும்.
விநாயகர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஏக தந்த்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந் னோ தந்திஹி ப்ரசோதயாத்: இதன் அர்த்தம்: ஓம். ஒற்றை தந்தத்தைக் கொண்டவரை உம்மை வணங்குகிறேன்.
யானை முகத்தோனே எனக்கு சிறப்பான அறிவை தந்து என்னை ஆசிர்வதியுங்கள். விநாயகரை வணங்கி முடிக்கும் போது தீபாராதனை காட்டும் போது இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தைத் தினமும் 108 முறை சொல்லியும் வழிபாடு செய்யலாம். இப்படி செய்து வந்தால் தோஷங்கள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.