இன்றைய ராசி பலன்கள் (05.09.2021)
மேஷம்
இழுபறியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வாழ்க்கைத் துணைவருடன் நட்புறவோடு பழகினால் குடும்பத்தில் அன்பு நிலவும்.
ரிஷபம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
மிதுனம்
மகிழ்ச்சி குறைவான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரணையாக நடப்பதன் மூலம் மகிழ்ச்சி நிலவும்.
கடகம்
அமைதியாக இன்றைய நாளை கழிப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. வாழ்க்கைத் துணைவருடன் நட்புடன் பழகுவது நல்லது.
சிம்மம்
புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் இலக்குகளை அடையலாம். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.கணவன் மனைவி இடையே நட்புறவு பாதிக்கப்படலாம்.
கன்னி
சாதகமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.
துலாம்
அலைச்சலான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
விருச்சிகம்
எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஒருவழியாக அனுகூலமாக முடிந்துவிடும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
தனுசு
திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய தினம் வெற்றிகரமான நாளாக மாறும். குடும்பத்தில் நல்லுறவைப் பராமரிக்க அதீத உணர்ச்சி சப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.
மகரம்
பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே உறவு வலுப்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.
கும்பம்
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். புத்துணர்வுடன் இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் அதிகரிக்கும்.
மீனம்
விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய நாள் இன்று. இருப்பினும் கடினமான சூழலையும் கூட சிறப்பாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும்.