ஆடி வெள்ளி விரத வழிபாடு - அம்பிகையை வணங்கி, வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வரும்
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை இருக்கிறது. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வணங்கி, வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கிழமைகளில் சுக்ர வாரம் என்று வெள்ளிகிழமையை அழைப்பதுண்டு.
துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.
இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேம்படும். அதேபோல் ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம்.
இன்று ஆடி வெள்ளி பூஜை, வழிபாட்டு முறையை தெரிந்துக் கொள்ளுங்கள் -
- அதிகாலையில் பெண்கள் எழுந்து குளிக்க வேண்டும். வீட்டை நன்றாக துடைத்து, பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும்.
- பூஜை அறையில் இருக்கும் எல்லா சுவாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
- வேப்ப இலையை கொண்டு வந்து உங்களுடைய வீட்டின் நிலை வாசலில் கட்டி வைக்க வேண்டும்.
- ஒரு சிறிய பித்தளை சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை குங்குமம், இரண்டு வேப்ப இலை போட்டு, இந்த தீர்த்தத்தில் உங்களுடைய குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும்.
- அம்மனிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய குல தெய்வத்தின் நாமத்தை மனதுக்குள் உச்சரிக்க வேண்டும்.
-
இந்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக வைத்து, தீப ஆராதனை காட்டி மனதார ஆடி மாத பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.