தொடரும் சோகம்.. கொரோனா தொற்றால் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!
covid19
police
tamilnadu
By Irumporai
கொரோனா நோய்தொற்று பாதிப்பால் மேலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் கியூ பிரான்ச் உளவுத்துறை உதவி ஆய்வாளர் ,முருக ரமேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாநோய் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
ஆகவே, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார் முருக ரமேஷ் இதுவரை இவருடன் சேர்ந்து 5 காவலர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் காவல்துறையினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது .