வருங்கால புருஷன்னு கூட பாக்கலையே... பெண் போலீஸ் அதிகாரி செய்த செயல்

By Petchi Avudaiappan May 07, 2022 07:06 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 மோசடியில் ஈடுபட்ட தனது வருங்கால கணவரை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுன்மோனி ரபா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவரது பெற்றோர்கள் ஜுன்மோனி ரபாவிற்கு திருமணத்திற்காக வரன் தேடி வந்துள்ளனர். இதற்காக திருமணம் வரம் பார்க்கும் இணையதளத்தில் பதிவு செய்து இருந்தனர். 

அதன்மூலம் ராணா போகட் என்பவர்  ஜுன்மோனிக்கு அறிமுகமாகியுள்ளார். தான் அரசு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஜுன்மோனியும், ராணா போகட்டுடன் பேசி பழகிவந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

வரும் நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த உடன் வருங்கால கணவருடன் உதவி இன்ஸ்பெக்டர் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இதற்கிடையில் ஜுன்மோனிக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபர் திடீரென்று போனில்  தொடர்பு கொண்டு, நீங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நபர் சரியானவர் இல்லை. நீங்கள் விசாரித்துப் பாருங்கள். அவருடைய உண்மை முகம் தெரியும் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ஜுன்மோனி ராணாவிடம் விசாரிக்க முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.தொடர்ந்து அவருக்கு தெரியாமலே ராணா குறித்து ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரி எனக் கூறி கொண்டு பலரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது.

அவருக்கு தெரியாமலே ராணா குறித்து ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரி எனக் கூறி கொண்டு, பலரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது.  அவருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.