புரட்டி போட்ட கனமழை; 19 மாவட்டத்தில் 6 லட்சம் பேர் பாதிப்பு - 45 பேர் பலி

Assam
By Karthikraja Jul 02, 2024 05:40 AM GMT
Report

அசாம் மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழைபெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அசாம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா அதன் கிளை ஆறுகள் என 8 ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் அசாம் மாநிலத்தின் 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தவித்துவருவதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

புரட்டி போட்ட கனமழை; 19 மாவட்டத்தில் 6 லட்சம் பேர் பாதிப்பு - 45 பேர் பலி | Assam Floods 6 Lack Peoples Affected Heavy Rain

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 30ம் தேதிதான் தொடங்கும். ஆனால் இந்த முறை மே மாதம் 30ம் தேதியே மழை தொடங்கிவிட்டது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

மாநிலத்தில் வெள்ள நிலவரம் மிகவும் மோசமடைந்து உள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வேதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் மத்திய அரசு உதவியுடன் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

Breaking; அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

Breaking; அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

பிரதமர் மோடி

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு அசாம் மாநிலத்தில் மழை பொழிவு தொடரும் என தெரிவித்துள்ளது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர், கரீம்கஞ்ச், கச்சார், தேமாஜி, மோரிகான், உடல்குரி, திப்ருகார், டின்சுகியா, நாகோன், சிவசாகர், தர்ராங், நல்பாரி, சோனித்பூர், தவாம்பூர், தவாம்பூர், தவாம்பூர், கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 6,44,128 பேர் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். 45 பேரை சடலாமாக மீட்கப்பட்டுள்ளனர். 

assam flood kaziranga national park

பொதுமக்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காரசிங்கா தேசிய பூங்காவில் வெள்ளம் புகுந்துள்ளதால் பல விலங்குகள் மலைகளில் தஞ்சம் புகுந்துள்ளன. மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கலந்துரையாடினார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடி கூறியுள்ளதாக பிஸ்வா தெரிவித்திருக்கிறார்.