Comeback கொடுத்த வீரர்கள்...ஆசிய கோப்பை இந்திய அணி அறிவிப்பு
ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை
ஆசியக் கோப்பைத் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. செப்.17ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபால் மற்றும் ஆப்கானிஸ்தான் என 6 அணிகள் பங்கேற்கின்றன.
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடரில், தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய வரும் செப்.2ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பதில் பெரும் குழப்பம் நீண்ட காலமாகவே நீடித்து வந்தது. குறிப்பாக 4-வது இடத்தில் எந்த வீரரை களமிறக்குவது என்ற கேள்வி தேர்வு குழுவிடமும் அதிகளவில் காணப்பட்டு வந்தது.
இந்திய அணி அறிவிப்பு
இந்நிலையில், இன்று அஜித் அகர்கர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கலந்து கொண்ட அணி தேர்வு கூட்டத்தில் நடைபெற்ற அணி 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் விராட் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்களும், ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதே நேரத்தில் வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகியோரும் சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ்வும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன்னும், பேக் அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.