ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதல் - வெல்லப்போவது யார்?
இன்று நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இரு பிரிவுகளாக 6 அணிகள்
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
முதலாவது போட்டி
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு ஹாங்காங் - இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில், 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
வங்காளதேசத்தை வீழ்த்திய இலங்கை
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நேற்று இரவு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் (பி பிரிவு) மோதிக் கொண்டது. இப்போட்டியில், இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லான வெற்றியை பெற்றது.
இலங்கை த்ரில் வெற்றி
நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை - ஆப்கானிஸ்தான் அணி மோதின. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை 179 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
ஆசியக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்று 2வது போட்டியில், இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோத இருக்கின்றன. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், மீண்டும் இரு அணிகளும் மோத இருப்பதால், வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.