ரயில்வே பணியாளர்கள் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் - மத்தியமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்
ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், சமூகவலைத்தளங்களில் இந்தி மொழி குறித்து சினிமா பிரபலங்கள் மோதிக்கொண்டு வருகிறார்கள்.
இன்று நடைபெற்ற பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடக்கிறது. ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய பண்பாடு எதிரொலிப்பதாக பாஜக கருதுகிறது என்று பேசினார்.
இந்நிலையில், தமிழக்ததில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.