‘’ என்னையும் , ஸ்ரேயாஸும் ஒதுக்கிறாங்க ‘’ - உண்மையை உடைத்த அஸ்வின் !

ashwin shreyasiyer delhicapital
By Irumporai Nov 23, 2021 06:43 AM GMT
Report

டெல்லி கேப்பிடல்ஸ் அணி எந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறது என அஸ்வின் வெளிப்படையாக பேசியுள்ளார்.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்படவுள்ளன. இந்த அணிகளில் வீரர்களை எடுக்க  ஏலமும் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த  ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புசூழ்ந்துள்ளது.

இந்த நிலையில்  இதுகுறித்து அந்த அணியின் சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். அதில், டெல்லி அணியில் ஒரே ஒரு வெளிநாட்டு வீரராக ஆன்ரிக் நோர்க்கியா தக்கவைப்படவுள்ளார்.

இந்திய வீரர்களில் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் ஆகியோரை அணியில் நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது வீரராக எந்த இந்திய வீரரை தக்கவைக்கப்போகிறது என்பதற்கு தான் தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது. புறக்கணிக்கப்படும் சீனியர்கள் 13வது சீசன் வரை டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தன்னையும் (அஸ்வின்) தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை.

அப்படி தக்கவைக்க அவர்கள் முடிவு செய்திருந்தால், இந்நேரம் எனக்கு தெரிந்திருக்கும் என அஸ்வின் தெரிவித்தார். இதன் மூலம் சீனியர் வீரர்களை கைவிட்டு, இளம் வீரர்களையே டெல்லி அணி முக்கியத்துவம் கொடுத்து எடுக்கவுள்ளது தெளிவாக தெரிகிறது.

டெல்லி அணி முணைப்பு ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி இன்னும் ஒருமுறைகூட கோப்பை வெல்லவில்லை. ஆகவே அடுத்த சீசனிலாவது கோப்பை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அந்த அணி நிர்வாகம் உள்ளதாக கூறப்படுகிறது.