அஸ்வின் விளையாடினால் மட்டுமே இந்தியாவின் வெற்றி உறுதி - எச்சரிக்கும் முன்னாள் வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் கண்டிப்பாக விளையாட வேண்டும் என முன்னாள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் உள்ளன.
4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக அஸ்வின் களமிறங்குவது கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில், இஷாந்த் சர்மா 4வது டெஸ்ட் போட்டியில் இடம் பெற மாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஓவல் மைதானம் ஸ்பின் பந்து வீச்சுக்கு ஏதுவாக இருக்கும். அவர் அந்த போட்டியில் இடம்பெற்ற விளையாடினால் இந்திய அணியின் வெற்றியை உறுதியாகும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் அஸ்வின் இந்த மைதானத்தில் கவுண்டி தொடரில் சர்ரே அணிக்காக விளையாடி சோமர்செட் அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். எனவே அவருக்கு இங்கு எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.