சுற்றிவளைத்த ED..கொச்சியில் கைதான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்

V. Senthil Balaji DMK Enforcement Directorate
By Karthick Aug 13, 2023 10:15 AM GMT
Report

தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கொச்சியில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி   

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையின் விசாரணை முடிந்து புழல் சிறையில் வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கரூரில் கட்டி வரும் வீடு குறித்து பல முறை நோட்டீஸ் அளிக்கப்படும் நேரில் ஆஜராகாமல் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.

கைது செய்த ED  

வருமானவரி துறையும், அமலாக்கத்துறையும் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அசோக்குமார் நேரில் ஆஜராகாததால் அவரை தீவிரமாக அமலாக்கத்துறை தேட துவங்கியது. தற்போது அவரை, கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்னனர்.

ashok-kumar-arrested-in-kochi

நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தக்கலை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அசோக் குமாரும் கைது செய்யப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.