"சிறகாய் விரிந்தேன் உன்னால் தரையில் பறந்தேன் உன்னால்" - இணையத்தில் வைரலாகும் வார்னரின் குறும்பு செயல்

video viral david warner ashes test plays with children
By Swetha Subash Dec 21, 2021 06:02 AM GMT
Report

கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.

பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மூலம், 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று இருந்தது. ஆஷஸ் தொடரின் அடுத்த போட்டி வரும் 26ஆம் தேதி பாக்சிங் டே மெல்பேர்னில் தொடங்குகிறது.

275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றதை, அந்நாட்டு வீரர்கள் கொண்டாடினர்.

போட்டி முடிந்த சில நிமிடங்களில் மைதானத்தில் இருந்த குழந்தைகளை நோக்கி ஓடினார் வார்னர்.

மைதானத்தில் இருந்த அவரது மூன்று குழந்தைகளை கட்டியணைத்து வெற்றியை கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

வழக்கமாக குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடும் வார்னர், க்யூட் புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். வார்னர், வார்னர் குடும்பத்தினருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விரைவில் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதால், இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி பெற்ற இரு வெற்றிகளுக்கு வார்னருக்கு ஸ்பெஷலாகவே அமைந்திருக்கும்.