மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கான் முறையீடு
ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வுகள் வழங்க கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கான் முறையீடு செய்துள்ளார்
ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வுகள் வழங்க கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கான் முறையீடு செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, 25 நாட்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு, மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வாரந்தோறும் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாரந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.