சீக்கிரம் மீட்டிங்க முடிங்கப்பா : பிரதமர் பேச்சை மதிக்காமல் போஸ் கொடுத்த டெல்லி முதல்வர் , வைரலாகும் வீடியோ
டெல்லி பிரதமருடன் காணொலி காட்சி மூலமாக பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று பிரதமர் மோடி கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களுடன் டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலமாக பங்கேற்றார் . இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று, பெட்ரோல்- டீசல் விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு குறித்து பேசிய பிரதமர் மோடி, மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாநிலங்கள் பெட்ரோல் - டீசல் விலை மற்றும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும், வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை என்றும் மத்திய அரசுக்கு செவி கொடுக்காத மாநில மக்கள் தொடர்ந்து சுமைக்கு ஆளாகின்றனர் என்றும் பிரதமர் கூறினார்.
பிரதமர் இதனை கூறும் போது காணொலி காட்சியில் இணைந்திருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அப்புறம் வேற நீங்க சொல்லுங்க என்ற பாணியில் அசால்டாக தனது நாற்காலி மீது கையினை வைத்து கவனித்துள்ளார்.
#Watch | Arvind Kejriwal stretches during PM Modi's meeting with chief ministers over the #Covid19 situation in the country | Track today's latest news here: https://t.co/DWsbhtiRZl pic.twitter.com/AKvusrYvjn
— Economic Times (@EconomicTimes) April 28, 2022
கேஜ்ரிவாலின் இந்த செயல் பிரதமர் மோடியினை கிண்டல் செய்வது போல் இருப்பதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேஜ்ரிவால் இவ்வாறு செய்வது முதன் முறை அல்ல ஏற்கனவே கொரோனா முதல் அலை வந்தபோது பிரதமர் காணொலி வாயிலாக மாநில முதல்வர்களுடன் உரையாற்றும் போதும் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.