இறந்த மனைவியை குறித்து உருக்கமாக பதிவிட்ட இயக்குநர் அருண்ராஜா
‘ராஜா ராணி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் அருண்ராஜா காமராஜ். இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
இதன் பிறகு, கடந்த 2017ம் ஆண்டு ‘மரகத நாணயம்’ படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். இதனையடுத்து, ‘தெறி’, ‘காக்கிசட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’ படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு இவரின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.
தாலி கட்டிய மனைவியை தொட்டு கூட பார்க்க முடியாமல் கதறி அழுத அருண்ராஜா காமராஜின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தன் மனைவியை குறித்து இயக்குநர் அருண்ராஜா டுவிட்டர் பக்கத்தில் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், உடனிரு எப்போதும் ❤️❤️❤️ உடைந்திடா உண்மையாய் உடைத்திடா மென்மையாய் .. ஏதேதோ எண்ணங்கள் எனைச்சூழ நீயே அரணாய் எனை ஆள.. உடனிரு எந்நாளும் பாப்பி ❤️❤️❤️ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
உடனிரு எப்போதும் ❤️❤️❤️ உடைந்திடா உண்மையாய்
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) May 15, 2022
உடைத்திடா மென்மையாய் ..
ஏதேதோ எண்ணங்கள் எனைச்சூழ
நீயே அரணாய் எனை ஆள..
உடனிரு எந்நாளும் பாப்பி ❤️❤️❤️ pic.twitter.com/rjKkWb5X30