எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்த காரணம் இது தான் : நீதிபதி ஆறுமுகசாமி விளக்கம்

By Irumporai Nov 27, 2022 03:56 AM GMT
Report

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, ஏய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்ததற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார்.

நீதிபதி ஆறுமுகசாமி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, ஏய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்ததற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு முதலில் இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை தேவைப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்த காரணம் இது தான் : நீதிபதி ஆறுமுகசாமி விளக்கம் | Arumugasamy Commisions Jayalalitha Death

ஆஞ்சியோ சிகிச்சை வேண்டாம் என மூன்று மருத்துவர்கள் கூறியதாக அறிக்கை வெளியானது. ஆனால், மருத்துவர்கள் ஏன் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவில்லை என்பது என்னுடைய சந்தேகமாக இருந்தது.

சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறியதும் முரணாக இருந்தது. இதனால், ஏய்ம்ஸ் அறிக்கை நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்  

கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்

மேலும், ஒரு பெண்ணானவள் இந்த உலகத்தைவிட்டுப் போவதற்கு முன்பு ஒரு உயிரை இந்த உலகத்துக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற சேக்ஸ்பியரின் பொன்மொழிக்கேற்றார்போல், ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும். மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் என்றார்.