அரும்பாக்கம் வங்கி கொள்ளை - காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பது அம்பலம்!

Chennai Tamil Nadu Police Crime
By Sumathi Aug 18, 2022 07:31 AM GMT
Report

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கி கொள்ளை

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரும்பாக்கம் வங்கி கொள்ளை - காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பது அம்பலம்! | Arumbakkam Bank Robbery Update

இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ,சூர்யா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல் ஆய்வாளருக்கு தொடர்பு

வங்கி கொள்ளை தொடர்பாக கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த 32 கிலோ தங்க நகையும் மீட்கப்பட்டது.

அரும்பாக்கம் வங்கி கொள்ளை - காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பது அம்பலம்! | Arumbakkam Bank Robbery Update

இந்நிலையில், அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜுக்குத் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, காவல் நிலைய ஆய்வாலரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.