வேரும்,தண்டும் இல்லாத செயற்கை மரம்; ஆனால் ஆக்ஸிஜனை தயாரிக்கிறது - எந்த நாட்டில் தெரியுமா?

Serbia World
By Jiyath Nov 02, 2023 07:40 AM GMT
Report

செர்பியா நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் வேரும்,தண்டும் இல்லாத செயற்கை மரத்தை உருவாக்கியுள்ளார். 

திரவ மரம்

உலகில் மோசமான காற்றின் தரத்தின் அடிப்படையில் செர்பியா நாடு 8வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஸ்பாசோஜெவிக் என்னும் ஆராய்ச்சியாளர் லிக்விட் 3 என்னும் 600 லிட்டர் திரவத்தை கண்டுபிடித்துள்ளார்.

வேரும்,தண்டும் இல்லாத செயற்கை மரம்; ஆனால் ஆக்ஸிஜனை தயாரிக்கிறது - எந்த நாட்டில் தெரியுமா? | Artificial Liquid Tree Created By Serbia

அந்த திரவத்தில் உள்ள நுண்பாசிகள் (micro-algae) காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிந்துவிட்டு ஒளிச்சேர்க்கையின் மூலம் ஆக்ஸிஜனை தயாரிக்கிறது. இந்த நுண்பாசிகளானது 10 வயதுடைய 2 மரங்களின் திறமைகளுக்கு சமமானது. அல்லது 200 சதுர அடியுள்ள புல்தரையின் திறமையுடையது. மேலும் இந்த திரவம் மரங்களை விட 10 முதல் 50 மடங்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இந்த நகரத்தில் ஒரே நேரத்தில் 2 நாட்டில் இருக்கலாம்; எல்லாமே இங்கு 2 தான் - அதெப்படி?

இந்த நகரத்தில் ஒரே நேரத்தில் 2 நாட்டில் இருக்கலாம்; எல்லாமே இங்கு 2 தான் - அதெப்படி?

காற்று சுத்திகரிப்பு

வேரும் தண்டும் இல்லாத ஒரு திரவ மரமாக இது கருதப்படுகிறது. லிக்விட் 3 என அழைக்கப்படும் இந்த திரவ மரமானது நகர்ப்புற காற்றை சுத்திகரிக்கும் ஒரு பொருளாகவே பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேரும்,தண்டும் இல்லாத செயற்கை மரம்; ஆனால் ஆக்ஸிஜனை தயாரிக்கிறது - எந்த நாட்டில் தெரியுமா? | Artificial Liquid Tree Created By Serbia

செடியோ மரமோ நடுவதற்கு இடமில்லாத மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் இந்த லிக்விட் 3 திரவ மரமானது பெரிதும் உதவக்கூடியது. இதை ஒரு பெஞ்ச்சாகவோ, மொபைலுக்கு சார்ஜ் போடும் இடமாகவோ, சோலார் பேனலாகவோ அல்லது இரவில் ஒலிக்காகவோ பயன்படுத்தலாம். மேலும் இந்த திரவமானது அதிகமான பராமரிப்பு தேவை இல்லாத பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.