கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை விட அதிக வீரியம் கொண்ட மஞ்சள் பூஞ்சை கண்டுபிடிப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை

article-black-fungal-disease
By Nandhini May 24, 2021 10:21 AM GMT
Report

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி மனித உயிர்களை அழித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவின் வீரியமும், அதன் நிலைத்தன்மையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் மனித இனமே சிறிது சிறிதாக அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனால் அனைத்து உலக நாடுகளில் உள்ள மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால், உலக நாடுகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, தற்போது கருப்பு பூஞ்சை, வெள்ளை நோய் தாக்கம் ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மஞ்சள் பூஞ்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே ஒருவித அச்சத்தை நாளுக்கு நாள் அதிகமாக்கி வருகிறது.

வெள்ளை பூஞ்சையை விட மஞ்சள் பூஞ்சையில் வீரியம் அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை விட அதிக வீரியம் கொண்ட மஞ்சள் பூஞ்சை கண்டுபிடிப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை | Article Black Fungal Disease

இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம் -

கொரோனா மக்களை வாட்டி வதைத்து வரும் வேளையில், புதிய அபாயமாக கருப்பு பூஞ்சை நோய் உருவெடுத்து நாடு முழுவதும் பரவி வருகிறது.

குறிப்பாக ராஜஸ்தான், ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மொத்தமாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பு பூஞ்சைதான் என்று நினைத்தால், இன்னொன்றாக பீகாரில் சிலருக்கு வெள்ளை பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை மிகப் பயங்கரமானது என்று மருத்துவர்கள் கூறினர்.

இந்த வெள்ளை பூஞ்சை நோய் நுரையீரலை மட்டுமல்லாமல் நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, உள்ளிறுப்புகள் மற்றும் வாய் உள்ளிட்ட உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கும்.

சர்க்கரை நோய் போன்ற பலவீனமான நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், புற்றுநோய் நோயாளிகள், நீண்ட காலத்திற்கு ஸ்டீராய்டுகளை உள்ளவர்களக்கு வெள்ளை பூஞ்சை நோய்கள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறினர்.

கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை விட அதிக வீரியம் கொண்ட மஞ்சள் பூஞ்சை கண்டுபிடிப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை | Article Black Fungal Disease

இந்த இரண்டு பூஞ்சை நோய்களின் செய்திகளைக் கேட்டே பயத்தில் உள்ள நமக்கு இடிக்கு மேல் இடியாக வந்திருக்கிறது மஞ்சள் பூஞ்சை நோய்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பூஞ்சை நோய்களை விட இந்த மஞ்சள் பூஞ்சை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சோம்பல், பசியின்மை, எடை இழப்பு, காயங்களில் மஞ்சள் பூஞ்சை சீழ் கசிவு, உறுப்பு செயலிழப்பு, கண்பார்வை மங்குதல். நம்முடைய சுற்றுப்புறத்தைத் தூய்மையில்லாமல் வைத்திருந்தால் மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாக்டீரியா, பூஞ்சைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பழைய உணவுகளை வீட்டிலேயே வைத்துக்கொள்வதாலும் இத்தொற்று உண்டாகலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல வீட்டின் அருகே அதிக ஈரப்பதம் இருந்தாலும் கேடாக விளையும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.