அரசியல்வாதிகள் ஆபாச படம் பாக்குறாங்க.." கைதான ராஜ் குந்த்ரா சர்ச்சை ட்வீட்

Politician rajkundara controversialtweet
By Irumporai Jul 20, 2021 11:38 AM GMT
Report

ஆபாசப் படங்களைத் தயாரித்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பதிவிட்டுள்ள பழைய ட்வீட் வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆபாசப் படங்களைத் தயாரித்த வழக்கில் மும்பை போலீசார் தங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் ஆண் மற்றும் பெண் மாடல்கள், ஒன்பது தயாரிப்பாளர்களை மும்பை போலீஸ் கைது செய்திருந்தது.

இந்த ஒன்பது நபர்களில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர் ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனைச் சந்தா மூலம் இயங்கும் மொபைல் செயலிகளில் வெளியிட்டு வந்ததாக போலீசார் குற்றஞ்சாட்டினர். அதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு ஆபாசப் படங்கள் குறித்தும், பாலியல் தொழில் குறித்தும் ராஜ் குந்த்ரா பதிவிட்ட ட்வீட்கள் தற்போது வைரலாகிவருகின்றன.

அரசியல்வாதிகள் ஆபாச படம் பாக்குறாங்க.."  கைதான ராஜ் குந்த்ரா சர்ச்சை ட்வீட் | Arrested Raj Kundra Controversial Tweet

ராஜ் குந்த்ரா தனது பழைய ட்விட்டர் பதிவில் இந்தியாவில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். அரசியல்வாதிகள் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர்.

ஆபாச நட்சத்திரங்கள் நடிகர்களாகி வருகிறார்கள் என ட்வீட் செய்துள்ளார். தனது மற்றொரு ட்வீட்டர் பதிவில் கேமரா முன் ஆபாசப் படங்களில் நடிக்க ஒருவருக்குப் பணம் கொடுத்தால் அது சட்டப்படி சரி. இதற்கும் பாலியல் தொழிலுக்கும் என்ன வித்தியாசம்" என ட்வீட் செய்துள்ளார்.

அரசியல்வாதிகள் ஆபாச படம் பாக்குறாங்க.."  கைதான ராஜ் குந்த்ரா சர்ச்சை ட்வீட் | Arrested Raj Kundra Controversial Tweet

தற்போது இந்த இரண்டு ட்வீட்களும் இப்போது வைரலாகிவருகின்றன.