வேறொரு நடிகையுடன் அர்ணவுக்கு தொடர்பு...கண் முன்னே தனியறையில் நெருக்கம் - மனைவி திவ்யாஸ்ரீ

Serials Tamil Nadu Police
By Thahir Oct 07, 2022 07:35 AM GMT
Report

ஷுட்டிங் ஸ்பாட் ஒன்றில் தனது கணவர் அர்ணவ் வெறோரு பெண் நடிகையுன் கட்டி பிடித்து உல்லாசமாக என் கண் முன்னே இருந்தார் என பிரபல சீரியல் நடிகை திவ்யாஸ்ரீ குற்றம்சாட்டியுள்ளார்.

நட்பு காதலாக மாறியது 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஒருவருடன் திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது. அதன் பின்னர் விவாகரத்து பெற்று இருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் “கேளடி கண்மணி” நாடகத்தில் கதாநாகியாக நடித்த போது அதே நாடகத்தில் கதாநாயகனாக அர்ணவ் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வேறொரு நடிகையுடன் அர்ணவுக்கு தொடர்பு...கண் முன்னே தனியறையில் நெருக்கம் - மனைவி திவ்யாஸ்ரீ | Arnav Is In A Relationship With Another Actress

பின்னர் நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து அர்ணவின் கட்டாயத்தால் ஹிந்துவாக இருந்த திவ்யா, முஸ்லீம் மதத்திற்கு மாறி இருக்கிறார்.

நடிகையுடன் தொடர்பு 

கடந்த ஜுலை மாதம் ஹிந்து முறைப்படியும், முஸ்லீம் முறைப்படியும் அர்ணவுடன், திவ்யா திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வேறொரு நடிகையுடன் அர்ணவுக்கு தொடர்பு...கண் முன்னே தனியறையில் நெருக்கம் - மனைவி திவ்யாஸ்ரீ | Arnav Is In A Relationship With Another Actress

இந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட வீடியோ, புகைப்படங்கள் எதையும் சமூக வளைத்தல பக்கத்தில் பகிர வேண்டாம் என திவ்யாவை அர்ணவ் கட்டயாப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே செல்லம்மா சீரியலின் நடிகையான அன்ஷித்தா என்பவர் உடன் அதே நாடகத்தில் நடிகராக நடித்து வரும் அர்ணவ், தனி அறையில் தனது கண் முன்னே நெருக்கமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இது குறித்து தனது கணவரிடம் கேட்டதற்கு தன்னை கொச்சையான வார்த்தைகளால் திட்டியதாகவும், அந்த நடிகையிடன் என் கணவருடன் ஏன் இப்படி இருக்கிறாய் என கேட்டதற்கு தன்னை கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் தண்ணீர் பாட்டிலால் வயிற்றில் தாக்கியதாகவும், உன் குழந்தை வயிற்றிலேயே செத்து போகும் என சாபம் விட்டதாகவும் தெரிவித்தார்.

கண்ணீர் சிந்தும் திவ்யா 

பின்னர் வீடு ஒன்றை வாங்கினோம் அதன் மாதத் தவணையை நான் தான் பார்த்து கொள்கிறேன். மேலும் பல முறை தன் கண்முன்னே நடிகை அன்ஷித்தாவுக்கு போனில் ஐ லவ் யூ கூறிக்கொண்டு முத்தம் கொடுத்ததாக கதறி அழுதார்.

வேறொரு நடிகையுடன் அர்ணவுக்கு தொடர்பு...கண் முன்னே தனியறையில் நெருக்கம் - மனைவி திவ்யாஸ்ரீ | Arnav Is In A Relationship With Another Actress

தான் அர்ணவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும், ஆனால் சேர்ந்து வாழ்வதற்கான அத்தனை வழிகளையும் அர்ணவ் அடைத்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய வாட்ஸ் அப், செல்போன், இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளிட்ட அனைத்திலும் தன்னை பிளாக் செய்துவிட்டார் என குறிப்பிட்ட திவ்யா தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில் எப்படி இருக்க என்ன வேண்டும் என்று கூட கேட்கவில்லை என கதறி அழுதார்.