மீண்டும் பாஜகவில் இணைந்தார் அர்ஜுன மூர்த்தி...!
அர்ஜுன மூர்த்தி
பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக பதவி வகித்தவர்தான் அர்ஜுன மூர்த்தி. கடந்த ஆண்டு ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க இருந்த நிலையில், அந்த பதவியிலிருந்து விலகி, ரஜினியுடன் தன்னை இணைத்து கொண்டார். இதையடுத்து ரஜினியின் தொடங்கப்படாத கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி நியமிக்கப்பட்டார்.
தனி கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி
ஆனால், ரஜினி உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரபோவதில்லை என்று அறிவித்ததையடுத்து, அர்ஜுன மூர்த்தி தனி கட்சி தொடங்க ஆயத்தமானார். அதன்படி ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற புதிய கட்சியை அர்ஜுன மூர்த்தி தொடங்கினார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மீண்டும் பாஜகவில் இணைந்தார்
இந்நிலையில், தற்போது தனிக்கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி மீண்டும் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.