தந்தை சச்சினைப்போலவே சாதனைப் படைத்த அர்ஜூன் டெண்டுல்கர்..! - குவியும் வாழ்த்துக்கள்
சச்சின் டெண்டுல்கர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வந்தார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
1992, 1996 ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகள் சச்சினை உலக அரங்கில் தலை சிறந்த ஆட்டக்காரராய் தன்னை நிலை நிறுத்தினார்.
1993-ல் அசாருத்தீன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அணிக்கு சச்சின் துணைத் தலைவராய் 18 வயதிலேயே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சலி மேத்தா என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார் சச்சின். இத்தம்பதிக்கு சாரா, அர்ஜுன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சாதனைப் படைத்த அர்ஜூன் டெண்டுல்கர்
இந்நிலையில், ரஞ்சித் தொடரின் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அர்ஜூன் டெண்டுல்கர் சாதனைப்படைத்துள்ளார்.
கோவா அணிக்காக விளையாடிய அர்ஜூன், 112* ரன்களுடன் விளையாடி வருகிறார். கடந்த 1988ஆம் ஆண்டு ரஞ்சி தொடரின் அறிமுகப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரும் சதமடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.