‘13 வயதில் நடந்த அந்த சம்பவம்தான் என் வாழ்க்கையை மாற்றியது...’ - மனம் திறந்த நடிகை அர்ச்சனா குமார்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தால் சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த அர்ச்சனாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வர தொடங்கியது.
அடுத்ததாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்தார். அதன் பிறகு பொது நிகழ்ச்சிகள் , மாடலிங் , இன்ஸ்டாகிரம் ரீல்ஸ் என தன்ன படு பிஸியாக வைத்துள்ளார் நடிகை. இந்நிலையில், நடிகை அர்ச்சனா தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அர்ச்சனா சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீகுந்த ஆர்வம் இருந்து வந்துள்ளது. 13 வயதில் ஒருமுறை அர்ச்சனா மேடையில் ஏறி நடமாடினார். அப்போது, அவர் நன்றாக ஆட தெரியவில்லை என்று பாதியிலேயே அர்ச்சனாவை இறக்கிவிட்டுள்ளனர்.
இந்த அவமானத்தால், நடனத்தை முறையாக கற்க வேண்டும் என்ற எண்ணமும், வெறியும் அர்ச்சனாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நடன வகுப்பில் சேர்ந்து முறையாக நடனத்தை கற்றுள்ளார்.
சிறு வயதில் நிகழும் இது போன்ற அவமானங்களை நாம் நேர்மறையாக எடுத்துச்செல்ல வேண்டும் என்று கூறுகிறார் நடிகை அர்ச்சனா.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ராஜா, கலக்கல் ராணி ரியாலிட்டி ஷோவிலும் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டு ஒரு கலக்கு கலக்கினார் அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது.