நெருங்கும் அட்சய திருதியை.. உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
உயர்வு
அதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 உயர்ந்து 5,665க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரனுக்கு 120 உயர்ந்து 45,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 81 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 81,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.