ரோஜ்கர் மேளா திட்டம் - ரயில்வேயில் 50 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் ரயில்வே துறையில் விரைவில் 50,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
ரோஜ்கர் மேளா திட்டம்
மத்திய அரசு துறையில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கபட்டிருந்தது , இதன் படி கடந்த அக்டோபர் 22-ம் தேதி ரோஜ்கர் மேளாவை (வேலை வாய்ப்பு திருவிழாவை ) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் ,அன்றய தினம் முதல் கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை வழங்கினார்.
50,000 பேருக்கு பணி நியமன ஆணை
இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக மத்திய அரசு பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டது . அடுத்த கட்டமாக ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ரோஜ்கர் மேளாவின் மூலம் ரயில்வே துறையில் 50,000 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது .
ரயில்வே துறையில் மொத்தம் 3.15லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன ,இந்த
காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்படும் ,விரைவில் கர்நாடக சட்டசபை ப்பேரவை தேர்தல் நடை பெறுவதால் ,அதற்கு முன்னதாக ரோஜ்கர் மேளா நடத்தப்பட்டு , ரயில்வே துறை குரூப் சி பிரிவில் சுமார் 50,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்ப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .