10 நாளில் பாஜக ஆட்சியை கவிழ்த்தவர் ஜெ - நினைவூட்டி எச்சரிக்கும் அன்வர் ராஜா
இன்று அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்து கொண்டுள்ள அன்வர் ராஜா, கொள்கைக்கு இடர்பாடு ஏற்பட்டால் கூட்டணியில் இருந்து விலக அதிமுக தயங்காது என பாஜகவை எச்சரித்துள்ளார்.
கட்சியில் மீண்டும் இணைப்பு
அதிமுக பிளவுப்பட்ட போது, சசிகலாவிற்கு ஆதரவாக இருந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜ தற்போது மீண்டும் தன்னை எடப்பாடி பழனிசாமி முன்னணியில் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
10 நாளில் பாஜகவை கவிழ்த்தவர் ஜெ
பாஜகவை விமர்சித்த காரணத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா, இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அது குறித்து பதிலளித்தார்.
கட்சியின் கொள்கைக்கு ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால், உடனடியாக கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அதிமுக தயங்கியதில்லை என்று கூறிய அவர்,
பத்து நாள் டெல்லியில் இருந்து தங்கி அங்கே பாஜக ஆட்சியை கவிழ்த்தவர் ஜெயலலிதா என நினைவுப்படுத்தினார்.