காலியாகும் சசிகலா கூடாரம் - மீண்டும் அதிமுகவில் அன்வர் ராஜா
கட்சி பிளவுபட்ட போது, சசிகலாவிற்கு ஆதரவாக இருந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இன்று எடப்பாடி சந்தித்து தன்னை கட்சியில் இணைத்து கொண்டுள்ளார்.
அன்வர் ராஜா
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுக பிளவுபட்ட போது, சசிகலாவிற்கு ஆதரவாக பேசியிருந்த அதிமுகவின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, 2019-ஆம் தேர்தலில் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.பின்னர் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் எனப் பேசியதால், விளக்கமே கேட்கப்படாமல் கடந்த 2021ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மீண்டும் கட்சியில் இணைந்தார்
சசிகலா சிறைக்கு சென்ற போது, எடப்பாடி ஆதரவாக இருந்த அன்வர் ராஜா, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அரசியல் செயல்படுகளில் இருந்து முழுவதுமாக ஒதுங்கி இருந்தவர், இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை மீண்டும் கட்சியில் இணைத்து கொண்டார்.
இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் அமெரிக்க துருப்புக்களுக்கு மரண வளையம்: இஸ்ரேலுக்கு இன்று ட்ரம்ப் திடீர் எச்சரிக்கை! IBC Tamil
