ப்ளீஸ் ,இதை மட்டும் செய்யாதீங்க - வைரலான வாமிகா ஃபோட்டோ , கோலி வைக்கும் கோரிக்கை

viratkohli vamika viralphto anushukasharma
By Irumporai Jan 24, 2022 07:14 AM GMT
Report

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த போட்டியில் 288 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்காக விராட்கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 84 பந்தில் 5 பவுண்டரியுடன் 65 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அரைசதம் அடித்தவுடனே, பெவிலியன் உள்ளே இருந்து விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது குழந்தையான வாமிகாவுடன் வெளியே வந்தார்.

இதுநாள் வரை கேமராவின் கண்களிலே படாமல் வந்த வாமிகாவை மைதானத்தில் இருந்த கேமரா மூலமாக இந்த உலகத்திற்கு முதன்முறையாக அறிமுகமானார். தனது மகளை பார்த்த மகிழ்ச்சியில் அரைசதம் அடித்த விராட்கோலி, தனது பேட்டையே குழந்தையை தாலாட்டுவது போல தாலாட்டி தனது குழந்தையை பார்த்து ரசித்தார்.

இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில், தங்களது குழந்தையின் புகைப்படம் வெளியானது பற்றி கருத்து தெரிவித்திருக்கும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஜோடி, “நேற்று போட்டி நடைபெற்ற மைதானத்தில் எங்களது குழந்தையின் முகம் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டதை அறிந்தோம்.

கேமரா எங்களது குழந்தையின் பக்கம் இருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை. எங்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டது. ஏற்கனவே கேட்டுக் கொண்டது போல, வாமிகாவை புகைப்படம் எடுக்கவோ, எடுத்ததை பொது வெளியில் பகிரவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நன்றி” என தெரிவித்துள்ளனர்.