Anurag Thakur History in Tamil: கிரிக்கெட் வீரரான அனுராக் தாகூர் மத்திய அமைச்சராக சாதித்தது என்ன?

BJP
By Vinothini May 08, 2023 10:50 AM GMT
Report

இமாச்சல பிரதேசத்தின் முதல் கிரிக்கெட் அணி வீரரும், தற்போது மத்திய அமைச்சருமான அனுராக் தாகூரை பற்றி காணலாம்.

பிறப்பு, கல்வி

அனுராக் சிங் தாகூர், 1974-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி அன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் இமாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் துமால் என்பவரின் மூத்த மகன் ஆவார்.

anurag-thakur-history-in-tamil

இவர் ஜலந்தர் தயானந்த் மாடல் பள்ளியில் படித்தார், பின்னர் ஜலாந்தர் டாகா கல்லூரியில் தனது பி.ஏ. படிப்பை முடித்துள்ளர்.

anurag-thakur-history-in-tamil

பிறகு, இவர் 2002-ல், இமாச்சல பிரதேச அரசாங்கத்தின் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான குலாப் சிங் தாக்கரின் மகளான ஷெபலி தாக்கூர் என்பவரை தாகூர் திருமணம் செய்துகொண்டார்.

கிரிக்கெட் வாழ்க்கை

இவர், 2000-ல் ஜம்மு & காஷ்மீருக்கு எதிரான ஒரு ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார்.

anurag-thakur-history-in-tamil

முன்பாக அவர் HPCA-வின் தலைவராக இருந்தபோது, அவரை HPCA ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக தன்னை நியமித்துக் கொண்டார். இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாவதற்கு இவர் உதவியுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் கிரிக்கெட் போட்டியில் இவர் விளையாடியுள்ளார்.

நிர்வாகியாக சில காலம்

தொடர்ந்து, இவர் 2000-ல் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியை ஏற்ற பிறகு, முதல்-வகுப்பில் அறிமுகமான முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

anurag-thakur-history-in-tamil

இந்த முதல் டெஸ்ட் அவரது முதல் மற்றும் ஒரே ஒரு முதல்-வகுப்பு கிரிக்கெட் போட்டியாக இருந்தது. முதல் வகுப்பு கிரிக்கெட்டில் இந்த அனுபவம் BCCI தேசிய ஜூனியர் தேர்வுக் குழுவில் அவரது நிலையை உயர்த்தியது.

2016-ல் பி.சி.சி.ஐ.யின் செயலர் பதவியில் இருந்து பதவி உயர்வடைந்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், இவர் 2017 ல் உச்சநீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இவர் மகளிர் அறக்கட்டளையின் (HOW) நிறுவனராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

தொடர்ந்து, இவர் 2008-ம் ஆண்டு தனது தந்தையின் தொகுதியான ஹமீர்பூரில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக நின்று நடந்த இடைத்தேர்தலில் வென்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

anurag-thakur-history-in-tamil

அதைத்தொடர்ந்து, 2009 ல் 15 வது, 2014 ல் 16 வது, 2019 ல் 17 வது மக்களவைகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், 2016-ல், பிராந்திய இராணுவத்தில் சேர்ந்தார், இதன்மூலம் பிராந்திய இராணுவத்தில் வழக்கமான ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இவர் அகில இந்திய பாரதீய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேலும், 2019 ல், நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சரானார். தற்போது இவர் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார்.