படத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த நயன்தாரா - பகீர் கிளப்பிய பிரபலம்!!

Nayanthara Tamil Cinema Tamil Actress
By Karthick Jun 27, 2024 05:04 PM GMT
Report

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது "மண்ணாங்கட்டி " என்ற படம் தயாராகி வருகின்றது.

நயன்தாரா

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் தனக்கென தனி அடையாளத்தை உண்டாக்கி முன்னணி நாயகியாக இருக்கின்றார் நயன்தாரா. சர்ச்சைகள் அவரை தொடர்ந்தாலும், அதனையெல்லாம் ஓரமாக தள்ளி தன்னுடைய திரை வாழ்க்கையில் மும்முரம் காட்டி வருகின்றார்.

Actress Nayanthara

ஒரு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தவர், பின்னர் தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கி, வரிசையாக ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி, கதையின் நாயகியாகவும் மும்முரம் காட்டி வருகின்றார்.

Actress Nayanthara

தற்போது அஜித்துடன் "விடாமுயற்சி" படத்திலும், கதையின் நாயகியாக "மண்ணாங்கட்டி" என்ற படத்திலும் நடித்து வருகின்றார் நயன்தாரா.அவரை குறித்து சினிமா பத்திரிகையாளர் அந்தணன் அளித்துள்ள பேட்டியில், 

ஷூட்டிங்கில்...

கஜினி படத்தின் வில்லன்கள் நயன்தாராவை துரத்துவது போன்ற காட்சியின் ஷூட்டிங் போது, நயன் ஓடி வந்த போது, முருகதாஸ் திடீரென கட் சொல்லியிருக்கிறார்.காரணம், அப்போது நயன்தாரா அணிந்திருந்த சட்டை சற்று ஆபாசம் இருந்துள்ளது. இப்படி என்னால் எடுக்க முடியாது என கூறி, முருகதாஸ் வேறு சட்டை போட நயன்தாராவிடம் கூறியுள்ளார். அந்த நேரத்தில் நயன்தாராவிடம் வேறு சட்டை இல்லை.

திருமணமாகி 3 மாசம் தான்...250 கோடி ரூபாய் கடன் - ஆபிஸை இழுத்து மூடிய ரகுல் கணவர்!!

திருமணமாகி 3 மாசம் தான்...250 கோடி ரூபாய் கடன் - ஆபிஸை இழுத்து மூடிய ரகுல் கணவர்!!

அதன் காரணமாக, நயன்தாரா "கடைசி நேரத்தில் இப்படி சொல்றீங்க...வேற ஷர்ட் நா எடுத்துட்டு வரல, மாத்திக்க இங்க கேரவனும் இல்ல" என கூறியிருக்கிறார்.

Actress Nayanthara

பின்னர் இருவரும் பேசி ஒரு முடிவிற்கு வந்து, வேறு சட்டை வாங்கி வாருங்கள் என்று சொல்ல உதவி இயக்குநர் பிளாட்பார்ம் கடையில் சட்டையை வாங்கி கொண்டு வந்த தர, அதனை காரின் ஒன்றின் பின்னால் சென்று மறைவில் நின்று மாட்டிக்கொண்டு வந்துள்ளார். ஷூட்டிங்கிற்காக சட்டென மறைவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு நயன்தாரா நடித்து கொடுத்தார். இவ்வாறு அந்தணன் கூறினார்.