அண்டார்டிகாவில் 4 மாதங்களுக்குப் பிறகு சூரியன் உதயமானது - வைரலாகும் அரிய புகைப்படம் - மக்கள் மகிழ்ச்சி
அண்டார்டிகாவில் 4 மாதங்களுக்குப் பிறகு சூரியன் உதயமான அரிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இருளில் மூழ்கிய அண்டார்டிகா
உலகத்தில் 4 பருவ காலங்கள் ஏற்படும். ஆனால், அண்டார்டிகாவில் மட்டும் கோடை மற்றும் குளிர் என்று இரு பருவ காலங்கள்தான். 6 மாதங்கள் வரை கோடையில் பகல் வெளிச்சத்துடனும், மற்றொரு 6 மாதங்களுக்கு குளிர்காலத்தில் இருள் போர்த்தியும் அண்டார்டிகா காணப்படுகிறது.
இதனையடுத்து, அண்டார்டிகாவில் இந்த ஆண்டு மே மாதம் நீண்ட இரவு தொடங்கியது. இதனால், அண்டார்டிகாவில் சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது.
சூரியன் உதயமானது
இந்நிலையில், 4 மாதத்திற்கு பிறகு அண்டார்டிகாவில் இருள் மறைந்து, சூரியன் உதிக்க தொடங்கி உள்ளது. அண்டார்டிகாவில் 4 மாதங்களாக சூழ்ந்திருந்த இருள் விலகி சூரியன் உதயமானதால் விஞ்ஞானிகளும், மக்களும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், அண்டார்டிகாவில் இருள் விலகி சூரியன் உதயமான அரிய புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி கழகம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் -
As the days shorten here in southern Canada, Antarctica sees the Sun for the first time in 4 months. Tell me again about that flat Earth tomfoolery? https://t.co/XzkGoqz83n pic.twitter.com/iAFMHHNQph
— Chris Hadfield (@Cmdr_Hadfield) August 19, 2022
The Sun Finally Rises In Antarctica After Four Months Of Darkness https://t.co/M1ry6UpTue
— The BothSide News (@TheBothSideNews) August 23, 2022