தனுஷ் -ஐஸ்வர்யாவை தொடர்ந்து பிரியும் மற்றொரு நட்சத்திர தம்பதியினர் : சோகத்தில் ரசிகர்கள்
தனுஷ் -ஐஸ்வர்யாவை தொடர்ந்து திரையுலகில் அடுத்ததாக மற்றொரு நட்சத்திர தம்பதியினர் பிரியவுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடிகர் நாகசைதன்யா - நடிகை சமந்தா தம்பதியினர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் பிரிவதாக கடந்த மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரக்ஷிதா தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சொல்ல மறந்த கதை சீரியலில் நாயகியாக நடித்துவருகிறார்.
இதற்கிடையில் இவருக்கு அமையும் வாய்ப்புகள் போல தினேஷிற்கு வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரே வீட்டில் இருந்தால் சரிப்பட்டு வராது என கருதி தனித்தனியே இருவரும் வாழ்ந்து வருகிறார்களாம்.
இந்நிலையில் ரக்ஷிதா- தினேஷ் ஜோடி விரைவில் பிரிய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதுவரை இருவர் தரப்பும் பதில் சொல்லாத நிலையில் இவர்களின் நண்பர்கள் இது வெறும் வதந்திதான் என குறிப்பிட்டுள்ளனர்.