நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் : அதானிக்கா என எதிர்க்கட்சிகள் முழக்கம்
2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட்
அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியதுவம் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் துறைவாரியாக முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வந்தார் .
எதிர் கட்சி முழக்கம்
குறிப்பாக நிதியமைச்சர் விமானத்துறை குறித்து தனது உரையில் 50 விமான நிலையங்கள், துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டம் உள்ளதாக கூறினார்.
அப்போது எதிர்கட்சியினர் புதிய விமான நிலையங்கள் அதானிக்காக அமைக்கப்படுகிறதா என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர் இதனால் அவையில் சில வினாடிகள் அமளி நிலவியது.