அதிக வாக்குகள் வாங்கி தந்தால்10 சவரன் தங்க பரிசு! அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
அதிக வாக்குகள் வாங்கித் தந்தால் தங்கம் பரிசு என அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.
தங்க பரிசு
நடப்பாண்டின் மக்களவை தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்டு, தமிழக அரசியல் காட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
அதிரடி அறிவிப்பு
இந்நிலையில் அதிகமாக வாக்குகள் வாங்கித்தரும் கட்சிக்காரர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேலூரில் உள்ள ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான கஜேந்திரனை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "ஆரணி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் எந்தத் தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளருக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தருகிறார்களோ அந்த தொகுதியின் மாவட்ட ஒன்றிய கிளை செயலாளர்களுக்கு பத்து சவரன் தங்கம் வழங்கப்படும் " என்று கூறியுள்ளார்.
இது ஆரணி தொகுதி அதிமுகவினர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கி சுறுசுறுப்பாக வேலை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.