வெளியே வரும் அன்னபூரணி அம்மா - பிரஸ் மீட் வைக்க போவதாக அறிவிப்பு
அன்னபூரணி அரசு அம்மா பாராசக்தியாக அவதாரம் எடுத்த செய்தி நேரற்று வெளியான நிலையில் இன்று தடை வாங்கும் அளவிற்கு நிலை மோசமானது பேஸ்புக், ட்விட்டரை ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் குத்தகைக்கு எடுத்த அன்னபூரணி அரசு அம்மா , ஜனவரி 1 முதல் செங்கல்பட்டியில் தன் ஆன்மிக சேவை தொடங்க தயாராக இருந்தார்.
இந்த நிலையில் திடீர் அவதாரம் எடுத்தஅன்னபூரணி அரசு அம்மாவின் முயற்சிக்கு டிசம்பரிலேயே முடிவு கட்டிவிட்டது சமூகவலைதளம்.
டிசம்பர் 19 ம் தேதி செங்கல்பட்டில் நடத்திய முன்னோட்ட நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றதால், அதே பார்மட்டில் ஜனவரி 1 புத்தாண்டில் புதுமை படைக்க காத்திருந்தார் அன்னபூரணி அரசு அம்மா.
ஆனால், அதற்குள் இணையவாசிகள் நுழைந்து, 2020ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், தன் கணவரை பிரிந்து, மற்றொருவரின் கணவரோடு தன் காதல் பயணத்தை தொடங்கிய நிகழ்ச்சியை, ட்ரோல் செய்து, ஒரே நாளில், அன்னபூரணியை தரணி முழுவதும் கொண்டு சேர்த்துவிட்டனர்.
ஆகவே செங்கல்பட்டில் கடந்த 19ம் தேதி அனுமதியில்லாமல் நிகழ்ச்சி நடத்தியதாக, அன்னபூரணி மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்தது காவல்துறை
அது மட்டும் இல்லாமல் ஜனவரி 1 அன்று நடக்கவிருந்த அவதாரா நிகழ்ச்சிக்கும் தடை விதித்துள்ளனர் போலீசார் ,இந்த நிலையில் தனது அவதாரம் மோசமாகி வருவதை உணர்ந்த அன்னபூரணிஅரசு ,தனது முகநூல் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், மக்கள் அனைவருக்கும் வணக்கம், அம்மாவை பற்றி தவறான வதந்திகள் youtube news channel களில் பரவி வருகிறது. இதற்கான அனைத்து விளக்கங்ளும் media மூலம் விரைவில் அம்மா உங்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்துவார்
இந்த அறிவிப்பு அம்மா டிவோட்டி என்கிற பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக ஆன்லைனில் பிரபலமான அன்னபூரணி அம்மா வந்து என்ன சொல்வார் என எதிர்பார்த்து காத்திருக்கிறது இணைய உலகம்.