போலீசாருக்கு கண்ணாம் பூச்சி காட்டும் டக்கால்டி அன்னபூரணி
சமூக வளைத்தலங்களை திறந்தாலே ஹெடெக் அன்னபூரணி பற்றிய செய்திகளும்,மீம்ஸ்களும்,வீடியோ காட்சிகளும் உலா வருகின்றனர்.
ஏறத்தாழ 4 நாட்களுக்கு மேலாக பேஸ்புக்,இன்ஸ்டாகிராம்,யூடியூப் உள்ளிட்ட சமூக வளைத்தல பக்கங்களை ஆக்கிரமித்து இருக்கிறார் அன்னபூரணி.
விலைஉயர்ந்த சாமியாராக வலம் வந்த அவருக்கு போலீசார் தடுப்புகளை போட்டு தடுத்திருக்கின்றனர். ஆம் விலைஉயர்ந்த பட்டு புடவையில் தான் தன் குழந்தைகள் எனக் கூறிக்கொள்ளும் ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றுகிறார்.
தன்னை காண வரும் ஆதரவாளர்களை மஞ்சள் நிற ஆடையில் தான் வர வேண்டும் என கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர் குறித்தான பல அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது மேலும் நாளுக்கு நாள் அவர் குறித்தான தகவல்களை அறிந்து கொள்ள அவரது ஆதரவாளர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக்கொள்ளும் டம்மி அன்னபூரணி தனது இருப்பிட முகவரியை மாற்றி மாற்றி போலீசாருக்கு ஆட்டம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் பயணித்த காரைப்பற்றி தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. சிந்தாமல் சிதறாமல் அவர் வந்து இறங்கும் காரின் இன்சூரன்ஸ் எக்ஸ்பிரி ஆகி விட்டதாகவும் அதில் அவர் லக்சரி பயணம் மேற்கொள்வதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
யார் கண் பட்டதோ.. பக்தர்களை பாத கமலத்தில் சரணடைய அழைத்த அம்மா, இப்போது போலீசாரிடம் சரணடைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This