ஆதரவாளர்களை அதிகப்படுத்தும் அன்னபூரணி - வெளியான புது தகவல்
அண்மை காலாமாக சமூக வலைத்தலத்தை ஆக்கிரமித்து இருந்த அன்னபூரணி தற்போது என்ன செய்கிறார் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வளைத்தல பக்கங்களில் மிகவும் வைரலானவர் பெண் சாமியார் அன்னபூரணி.
இவர் தனியார் தொலைக்காடசி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மையில் கடந்த 2013ஆம் ஆண்டு பங்கேற்றார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வளைதலத்தில் தான் ஆதிபராசக்தி அவதாரம் என்று கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அன்னபூரணி குறித்து பல ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்நிலையில் அவர் தற்போது என்ன செய்து வருகிறார் என்பது பொதுமக்கள் மட்டுமின்றி நெட்டிசன்கள் மத்தியிலும் ஒரு எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தனது யூடியூப் மற்றும் பேஸ்புக் போன் பக்கத்தில் உலா வரும் அன்னபூரணி தனது ஆதரவாளர்களை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் வீடியோக்களில் பெரும்பாலும் ஒரு இளம் பெண் அன்னபூரணி அருகே அமர்ந்து கொண்டு அவரை பற்றி பெருமையாக பேசி தனக்கு அருள் வந்ததை போன்று பேசி அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இந்த வீடியோக்கள் வெகுவாக சமூக வளைதலத்தில் பகிரப்பட்டு வந்தது.இதையடுத்து அவர் தற்போது தனது ஆதரவாளர்களை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர் தனது சமூக வளைதல பக்கங்களில் ஆதரவாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை வீடியோ பதிவாக வெளியிட்டார். அதில் பெரும்பாலான அவரது ஆதரவாளர்கள் அவரை புகழ்ந்து பேசினார்.
மேலும் அவரால் தான் தங்களின் வாழ்க்கை மாறியதாகவும் குறிப்பிட்டனர். இந்நிலையில் அன்னபூரணி தனது யூடியூப் பக்கத்தில் மாறுபட்ட தலைப்புகளில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இதன் மூலம் தனது ஆதரவாளர்களை அவர் அதிகப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்