வைரலாகும் அன்னபூரணி காலாண்டர் - விற்பனை படு ஜோர்
பெண் சாமியார் அன்னபூரணியின் புகைப்படம் பதித்த காலாண்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறி சமூக வளைத்தலத்தில் டிரெண்டிங் ஆனார் அன்னபூரணி.
இந்நிலையில் பல்வேறு ஊடகங்களும் அவர் குறித்தான செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்நிலையில் அவர் தலைமறைவாக இருந்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அன்னபூரணி தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தன்னைபற்றி ஊடகங்கள் அவதுாறு பரப்புவதாக கூறி புகார் அளித்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறவில்லை.நான் சாமியார் என்று சொல்லவில்லை என்றும் ஆன்மிகம் என்றால் என்ன என்பதை கற்று கொடுக்கவே பயிற்சி தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் புகைப்படம் பதித்த காலாண்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காலாண்டரில் அகிலம் ஆளும் ஆத்தா என்றும் அன்னபூரணியின் முரட்டு பக்தர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அனைவரும் வருக அம்மன் அருள் பெருக என்று பொறிக்கப்பட்டுள்ளது.
தான் சாமியார் என்று கூறவில்லை என அன்னபூரணி கூறிய நிலையில் தற்போது அகிலம் ஆளும் ஆத்தா என்ற காலாண்டர் இணையத்தை கலக்கி வருகிறது.