பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு..திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை...!

M K Stalin DMK BJP K. Annamalai
By Karthick Aug 27, 2023 06:00 AM GMT
Report

திமுக ஆட்சி காலம் என்றாலே நில ஆக்கிரமிப்புகள் அதிகளவில் நடைபெறும் என குற்றம்சாட்டிய அண்ணாமலை, பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டம் சங்கர் நகர் பகுதியில் உள்ள திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான பேச்சி பாண்டியன், மற்றொருவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து, அதனை எதிர்த்த நில உரிமையாளர்களான தந்தை, மகன் இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார் என பதிவிட்டு இருக்கிறார்.

annamalai-warns-dmk-about-land-abduction-case

இவரது தாக்குதலில் காயமடைந்த தந்தை மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது என குறிப்பிட்டுள்ள அவர், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல், நிலத்தின் உரிமையாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பேச்சி பாண்டியன் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி வருகிறது திமுக அரசு என குற்றம்சாட்டியுள்ளார்.  

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு 

பேச்சி பாண்டியன் மீது பல நில ஆக்கிரமிப்புப் புகார்கள் இருக்கிறது என சுட்டிக்காட்டி. ஆனாலும், சட்டத்திற்குப் பயப்படாமல் தொடர்ந்து சமூக விரோதச் செயல்களை செய்யும் தைரியம் இவருக்கு எங்கிருந்து வருகிறது? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, உடனடியாக, காவல்துறை பேச்சி பாண்டியனை கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 திமுக ஆட்சி என்றாலே நில ஆக்கிரமிப்பு என்பது இத்தனை ஆண்டு கால வரலாறாக இருக்கலாம் என பதிவிட்டு ஆனாலும் பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என திமுக அரசிற்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.