’’காற்றில் பறந்தது சமூகநீதி'’ பரபரக்கும் அண்ணாமலையின் அடுத்த ட்விட்டர் பஞ்சாயத்து !
நாள்தோறும் ஒவ்வொரு அமைச்சர் மீதும் கற்பனையான புகார்களை கூறி திமுக ஆட்சிக்கும் முதல்வருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுவதாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
பா.ஜ.க மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த ஒருவாரகாலமாக தமிழக அமைச்சர்களுக்கு எதிராக, பல விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்து ட்விட்டர் யுத்தம் நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு , த்ற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடும் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பை பற்ற வைத்தார்.
அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், 'தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு பல மாதங்களாக எந்தத் தொகையும் வழங்கப்படாமல் திடீரென ரூ. 29.64 கோடி வழங்கப்பட்டதற்கு காரணம் என்ன?. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்ல முடியுமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி:
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது என்று அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் ரூ. 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல்.
அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷன் என மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை, இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும்.
இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று ட்வீட் செய்திருந்தார். ஆனால், அண்ணாமலை பதிலுக்கு ட்வீட் செய்ய, தற்போது வரை இருவருக்கும் ட்விட்டர் யுத்தம் தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலை தற்போது தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜூக்கு எதிராக, ஒரு குற்றச்சாட்டை, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில் , திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்களை, தனது வீட்டில் தங்கி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்ய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பணி கொடுத்திருப்பதாக, அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
Today let us see DMK Party’s (FAKE) social justice!
— K.Annamalai (@annamalai_k) October 22, 2021
Adi Dravidar & Tribal Welfare Department Minister Shri.Kayalvizhi Selvaraj has prepared a chart wherein cooks from Adi Dravidar Welfare hostels has to work in the minister home from 7 am to 10 pm & stay there as a cook!
Shame! pic.twitter.com/A2LTwjnN6C
அதோடு, ’’காற்றில் பறந்தது சமூகநீதி மக்கள் வரிப்பணத்தில் அநீதி ‘’திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்களை, தன் வீட்டு வேலைக்காரர்களாக ஏன் பணியமர்த்த வேண்டும்? என்று ட்வீட் செய்ததோடு, சமையல்காரர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த விவகாரம், சமூகவலைதளங்களில் பேசும் பொருளாக மாற, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜும், தனது ட்விட்டர் பக்கத்தில், 'திரு. அண்ணாமலை அவர்கள், எங்கள் வீட்டு சமையலுக்கு நான் எங்கள் துறை விடுதியின் சமையலர்களை பயன்படுத்தி வருவதாக அபாண்டமாக பொய் சொல்லியுள்ளார்.
எங்கள் வீட்டு சமையலுக்கு இரு சமையலர்களை சம்பளத்திற்கு பணியில் அமர்த்தியுள்ளேன். அவர் வெளியிட்டிருக்கும் பட்டியலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை' என்று ட்வீட் மூலம், பதிலடி கொடுத்திருக்கிறார்.
திரு.அண்ணாமலை அவர்கள்,எங்கள் வீட்டு சமையலுக்கு நான் எங்கள் துறை விடுதியின் சமையலற்களை பயன்படுத்தி வருவதாக அபாண்டமாக பொய் சொல்லியுள்ளார்.எங்கள் வீட்டு சமையலுக்கு இரு சமையலற்களை சம்பளத்திற்கு பணியில் அமர்த்தியுள்ளேன்.அவர் வெளியிட்டிருக்கும் பட்டியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.
— Kayalvizhi Selvaraj (@Kayalvizhi_N) October 22, 2021
அடுத்தடுத்து, தமிழக அமைச்சர்களுக்கு எதிராக அண்ணாமலை ட்விட்டர் பக்கம் மூலம் நடத்தி வரும், ட்வீட் போர், தமிழக அரசியல் களத்தில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.