அந்த அளவிற்கு கேவலமானவர்கள் கிடையாது - பல்டி அடித்த அண்ணாமலை

K. Annamalai trichy
By Sumathi Nov 09, 2023 03:48 AM GMT
Report

சிலையை உடைக்கும் அளவுக்கு இங்கு யாரும் கேவலமானவர்கள் கிடையாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை 

திருச்சியில் 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நடைபெற்றது. அதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “தமிழகத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சியாக இருக்கிறது.

annamalai

கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்துள்ளார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு கம்பத்தை வைத்து பலகைகளை வைத்துள்ளார்கள். ஆனால், இந்துக்கள் நாம் அறவழி வாழ்க்கை வாழ்கிறோம்.

என்னை கைது பண்ணா விளைவு வேற மாதிரி இருக்கும்; அது அவர்களுக்கும் தெரியும் - அண்ணாமலை காட்டம்!

என்னை கைது பண்ணா விளைவு வேற மாதிரி இருக்கும்; அது அவர்களுக்கும் தெரியும் - அண்ணாமலை காட்டம்!

கம்பமும், பலகையும்

இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பாஜக கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும்.

trichy

மேலும், கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பாஜக ஆட்சி வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு முன்பும் அகற்றி காட்டுவோம். திமுக காரர்கள் கேட்கிறார்கள் அந்த சிலையையும் வாசகத்தையும் எங்கே கொண்டுபோய் வைப்பீர்கள் என்று,

சிலையை உடைக்கும் அளவுக்கு இங்கு யாரும் கேவலமானவர்கள் கிடையாது. சிலையாக இருந்தாலும் சரி வாசகமாக இருந்தாலும் சரி பொது இடத்தில் எங்கே இருக்க வேண்டுமோ அங்கு வைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.