சனாதனத்தை ஒழிக்க உதயநிதி யார்?....கொந்தளிக்கும் அண்ணாமலை
சனாதனம் குறித்து உதயநிதி பேசியிருக்கும் நிலையில், அதனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி பேச்சு
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.
இது பெரும் சர்சையையே கிளப்பியிருக்கும் நிலையில், டெல்லி வக்கீல் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்துள்ளார்.
அண்ணாமலை கேள்வி
இது குறித்து பேட்டியளித்துள்ள அண்ணாமலை, நேற்று உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாட்டின் 142 கோடி மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். ஏனென்றால் நேற்று ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பை அவர் காட்டி உள்ளார்.
அவர் ஒரு உரையைப் படித்துக்கொண்டிருந்தார். அது உணர்வுபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை அழிப்பதே இனப்படுகொலை எனப்படும். 'சனாதன தர்மத்தை' ஒழிக்க உதயநிதி யார்?. சனாதன தர்மத்தை' ஒழிக்க வேண்டும் என்றால், கோவில்கள் மற்றும் மதச் சடங்குகள் அனைத்தும் அழிந்து விடும். இவ்வாறு அவர் பேசினார்.