ஒரே வழக்கிற்கு பயந்துபோன சீமான்....மரியாதையே குறைஞ்சிடுச்சு...அண்ணாமலை

Vijayalakshmi Naam tamilar kachchi K. Annamalai Seeman
By Karthick Sep 04, 2023 10:25 AM GMT
Report

விஜயலக்ஷ்மி - சீமான் விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஒரே வழக்கில் சீமான் இவ்வளவு பயந்து போய்விடுவார் என தான் எண்ணவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சீமான் - விஜயலக்ஷ்மி விவகாரம்  

காவல் ஆணையர் அலுவலகம், திருவள்ளூர் மகிளா நீதிமன்ற போன்றவற்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலக்ஷ்மி புகார் அளித்துள்ள நிலையில், அது கவனத்தை ஈர்த்துள்ளது.

annamalai-slams-seeman-vijayalakshmi-controversy

இது குறித்து பல்வேறு விளக்கங்களை நாம் தமிழர் சீமான் தெரிவித்து வரும் நிலையில், இதற்கிடையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், நாம் தமிழர் சீமானுக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.   

ஒரே வழக்கிற்கு பயந்து போன சீமான்

ராமநாதபுரத்தில் மோடியை நேரடியாக எதிர்த்து போட்டியிட்டால் திமுகவிற்குதான் ஆதரவளிக்க தயார் என சீமான் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

annamalai-slams-seeman-vijayalakshmi-controversy

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, சீமானின் தைரியம் தனக்கு மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்ட அண்ணாமலை, ஆனால் ஒரே ஒரே வழக்கின் காரணமாக அவர் இவ்வாறு பயந்துவிடுவார் என தான் நம்பவில்லை என தெரிவித்தார்.

திமுக தொடர்ந்து விமர்சித்து வந்த சீமான், ஒரே வழக்கின் காரணமாக இப்படி திமுகவை பங்காளிகள் என கூறுவார் என்பதை தான் கனவிலும் பார்க்கவில்லை என தெரிவித்து சீமான் மீதிருந்த மரியாதையே தனக்கு குறைந்து விட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.