அண்ணாவை கொச்சைப்படுத்துவதா..?அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும்..ஜெயக்குமார்
அண்ணா குறித்து பாஜக அண்ணாமலை பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் கண்டனம்
இன்று முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைவர்கள் அவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சென்னை அண்ணாசாலையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செய்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக என்னவேண்டுமானாலும் பேசட்டும் என கூறிய ஜெயக்குமார் ஆனால், மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என தெரிவித்தார்.
அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும்
உலக தமிழரால் போற்றப்படும் தலைவரான அண்ணாவை குறித்து எங்கு படித்துவிட்டு இது போன்ற தவறான கருத்துக்களை அண்ணாமலை கூறுகிறார் என வினவிய அவர், அதற்கு நிச்சயமாக அதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறினார்.
நடக்காத விஷயத்தை சொல்லி முன்னாள் முதல்வர் அண்ணா பெயரை களங்கப்படுத்தக்கூடாது என்றும் இது போன்ற செய்லகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Siragadikka Aasai: திருட்டுச் செயினால் மாட்டிக் கொண்ட விஜயா... ரோகினியை அடித்து நொறுக்கிய காட்சி Manithan

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
